Published : 10 Jul 2015 08:04 AM
Last Updated : 10 Jul 2015 08:04 AM
கோவையில் வரும் 12-ம் தேதி நடக்கவுள்ள பாமக அரசியல் மாநாட்டில் தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பாமக சார்பில், ‘2016 ஆட்சி மாற்றத்துக்கான அரசியல் மாநாடு’ சேலத்தில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி நடந்தது. அதில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுக்கும் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தருமபுரி, காஞ்சிபுரம், வேலூர், கோவில் பட்டி உள்ளிட்ட 6 இடங்களில் அவரது தலைமையில் ஆர்ப் பாட்டங்கள் நடத்தப்பட்டன.
மேலும் பாமகவின் சோழ மண்டல மாநாடு, கங்கைகொண்ட சோழபுரத்தில் கடந்த மே 17-ம் தேதி நடந்தது. இந்நிலையில், பாமக கொங்கு மண்டல மாநாடு கோவை கொடிசியா வளாகம் அருகே வரும் 12-ம் தேதி நடக்கிறது. இதற்கு முன்பு நடந்த கூட்டங்கள் பாமகவின் செல்வாக்கை உணர்த்தியுள்ளது. தற்போது கோவையில் நடக்க வுள்ள அரசியல் மாநாட்டில் திரளாக பங்கேற்று பாட்டாளி சொந்தங்கள் சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT