Published : 14 Jul 2015 09:12 PM
Last Updated : 14 Jul 2015 09:12 PM

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை அசல் மதிப்பெண் சான்றிதழ்: அரசு தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகளில் நாளை (புதன்கிழமை) அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே மாதம் 14-ம் தேதி பள்ளிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டன.

இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்படும். தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு வசுந்தராதேவி கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x