Published : 26 Jul 2015 10:25 AM
Last Updated : 26 Jul 2015 10:25 AM
கரூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள்களை வழங்கிவிட்டு, மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஆகியோர் தங்களது வாகனங்களில் பாலவிடுதி பள்ளிக்குச் சென்றனர்.
அப்போது, அவர்களது வாக னங்களின் பின்னால் சென்ற அமைச்சரின் போலீஸ் பாதுகாப்பு வாகனம் கடவூர் அருகே திடீரென கவிழ்ந்தது. இதில், உதவி ஆய் வாளர் சரவணன், ஜீப் ஓட்டுநர் ஆயுதப்படைக் காவலர் வேலுசாமி, கார்த்திக், செந்தில்குமார் காய மடைந்து மணப்பாறையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT