Published : 15 Jul 2015 08:24 AM
Last Updated : 15 Jul 2015 08:24 AM

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் இன்று விநியோகம்

அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கடந்த மே மாதம் 14-ம் தேதி பள்ளிகள் மூலமாக விநியோகிக்கப் பட்டன. இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று (புதன் கிழமை) காலை 10 மணி முதல் அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக் கப்படும். தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலேயே அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள் ளலாம்.

இவ்வாறு வசுந்தராதேவி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x