Published : 04 Jul 2015 08:38 AM
Last Updated : 04 Jul 2015 08:38 AM
உடுமலையில் தேமுதிக பிரமுகர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 9 பேர் கோவை நீதிமன்றத்தில் நேற்று சரண் அடைந்தனர்.
உடுமலையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (45). திருப்பூர் தெற்கு மாவட்ட தேமுதிக முன்னாள் துணைச் செயலாளராக இருந்துவந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது காரில் வந்த ஒரு கும்பல் ஆயுதங்களால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.
இக்கொலை தொடர்பாக உடு மலை போலீஸார் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந் நிலையில், போலீஸாரால் தேடப் பட்டு வந்த உடுமலையைச் சேர்ந்த எம்.கர்ணன்(30), கே.சுரேஷ்(34), எம்.முருகானந்தம்(25), சி.காளி முத்து(25), எம்.லோகேஷ்(23), எஸ்.முபாரக்(24), பி.அர்ஜூ னன்(29), எம்.தம்பிசெல்வன்(33), ஆர்.பிரேம்குமார்(26) ஆகிய 9 பேர், கோவை ஜே.எம். 5-வது நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் ராஜவேல் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். இதையடுத்து, அவர்களை கோவை மத்திய சிறையில் ஒரு வாரம் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தர விட்டார். வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் எம்.சுந்தர் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT