Published : 26 Jul 2015 10:02 AM
Last Updated : 26 Jul 2015 10:02 AM

தேமுதிக செயற்குழு ஆக.2-ல் கூடுகிறது

தேமுதிக தலைமை செயற் குழுக் கூட்டம் சென்னையில் ஆகஸ்ட் 2-ம் தேதி நடக் கவுள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தேமுதிக தலைமை செயற்குழுக் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆகஸ்ட் 2-ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும்.

தலைமைக் கழக நிர் வாகிகள், உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், அணி களின் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப் பினர்கள், தலைமை செயற்குழு உறுப் பினர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x