Published : 24 Jul 2015 08:22 AM
Last Updated : 24 Jul 2015 08:22 AM
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு காந் தியவாதி சசிபெருமாள் நேரில் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வலி யுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், நடைப் பயணம் என பல்வேறு போராட்டங்களை காந்தியவாதி சசிபெருமாள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், திமுக ஆட் சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்காக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சசிபெருமாள் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT