Published : 04 Jul 2015 03:01 PM
Last Updated : 04 Jul 2015 03:01 PM

வேப்பனப்பள்ளி அருகே திறப்பு விழா காணாத அரசு மாதிரிப்பள்ளி: 350 மாணவர்கள் தவிப்பு, பெற்றோர் மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பில்லனகுப்பம் ஊராட்சிக் குட்பட்டது திப்பனப்பள்ளி கிராமம். இக்கிராமத்தில் உள்ள சமத்துவபுரம் எதிரில் ரூ.4 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் அரசு மாதிரிப்பள்ளி கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை 350 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கட்டிடங்கள் திறப்பு விழா நடக்காத காரணத்தால் பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் உள்ளனர். இது குறித்து பெற்றோர், கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று, சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் தலைமையில் பெற்றோர், பொது மக்கள் வேப்பனப்பள்ளி - குந்தாரப் பள்ளி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பெற்றோர் கூறும்போது, அரசு மாதிரிப்பள்ளி யில் சேர்ந்துள்ள மாணவர்களை குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பு கிறார்கள். வேப்பனப்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இரண்டு பேருந்துகளைப் பிடித்து ஆறு வழிச்சாலையை கடந்து பள்ளிக்குச் செல்வது சிரமமாக உள்ளது. மேலும் அங்கு போதிய வகுப்பறைகளும் இல்லை. இதனால் மாணவர்களின் படிப்பு வீணாகிறது. மாற்றுப்பள்ளியிலும் சேர முடியவில்லை. எனவே, மாணவர்களின் நலன்கருதி உடனடியாக பள்ளியைத் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

வட்டாட்சியர் ஜெயக்குமார், மாவட்ட தொடக்கக் கல்வி அலு வலர் அகமத்பாஷா, பள்ளி ஆய்வா ளர் சென்னப்பன், ஆர்எம்எஸ்ஏ ஜெயக்குமார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், தங்கவேல் ஆகியோர் பெற் றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

“பள்ளிக்குத் தேவையான குடிநீர், மேசை, நாற்காலி உள்ளிட்ட வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப் பட்டு பள்ளி செயல்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென் றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x