Published : 23 Jul 2015 10:23 AM
Last Updated : 23 Jul 2015 10:23 AM
பாகிஸ்தானில் ஈத் பெருநாளை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு மாங்கனிகளை நேற்று அனுப்பி வைத்தார்.
இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் இருந்து எல்லை தாண்டி வலிமையான பதிலடி தரப்படும் என இந்தியா எச்சரித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் ரம்ஜான் கொண்டாட்டத்தின்போது, எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் அளித்த இனிப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானில் ஈத் பெருநாள் கொண்டாடப்படுவதையொட்டி, நேற்று பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் மாங்கனிகள் அனுப்பி வைத்துள்ளார். இதனை அரசுத்துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT