Published : 09 Jul 2015 10:42 AM
Last Updated : 09 Jul 2015 10:42 AM

இட்டார்சி ரயில் நிலைய தீ விபத்து எதிரொலி: 4 விரைவு ரயில்கள் ரத்து

இட்டார்சி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மேலும் 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்தியப்பிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 17-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே பல விரைவு ரயில்களை ரத்து செய்துள்ளது. இந்நிலையில், மேலும் 4 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டேராடூன் - மதுரை

டேராடூனில் இருந்து மது ரைக்கு வாரம் இருமுறை இயக் கப்படும் விரைவு ரயில் (12688) வரும் 10-ம் தேதி டேராடூனில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப்படுகிறது.

கோரக்பூர் - திருவனந்தபுரம்

கோரக்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (12511) வரும் 10-ம் தேதி கோரக்பூரில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப் படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து கோராக்பூருக்கு வாரம் 3 முறை இயக்கப்படும் விரைவு ரயில் (12512) வரும் 14-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. கயாவில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் (12389) வரும் 12-ம் தேதி கயாவில் இருந்து புறப்படுவது ரத்து செய்யப் படுகிறது.

யஸ்வந்த்பூரிலிருந்து கண்ணூருக்கு இயக்கப்படும் யஸ்வந்த்பூர் விரைவு ரயில்களில் (16527/16528) 7-ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட 2-ம் வகுப்பு பெட்டி ஒன்று நிரந்தரமாக சேர்க்கப்படவுள்ளது.

ரயில் எண் மாற்றம்

வாரணாசியில் இருந்து ராமேசுவரத்துக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் வாராந்திர விரைவு ரயில் (14260) நவம்பர் 1-ம் தேதி முதல் மண்டுவாடியில் இருந்து இயக்கப்படவுள்ளது. இதனால், அதன் எண் 15120 என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்த விரைவு ரயில் மண்டுவாடியில் இருந்து இரவு 9.15க்கு புறப்படும். அதேபோல், ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் விரைவு ரயில் (14250) வரும் நவம்பர் 4-ம் தேதி முதல் மண்டுவாடி வரை இயக்கப்படவுள்ளது. அந்த ரயிலின் எண் 15119 என்று மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x