Published : 10 Jul 2015 11:24 AM
Last Updated : 10 Jul 2015 11:24 AM
நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம், தொட்லிங்கி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் பாலன் 30.4.2015 அன்று பொக்காபுரம் அருகிலுள்ள தொட்லிங்கி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்
உயிரிழந்த பாலன் குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஜெயலலிதா, ''காட்டு யானை தாக்கியதில் அகால மரணமடைந்த பாலனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த பாலன் குடும்பத்துக்கு வனத் துறை மூலம் மூன்று லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்'' என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT