Published : 10 Jul 2015 08:30 PM
Last Updated : 10 Jul 2015 08:30 PM
தனது பிறந்த நாளான ஜுலை 14-ம் தேதி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித் தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''எனது பிறந்த நாளான ஜுலை 14 அன்று சென்னைக்கு வந்து என்னை வாழ்த்துவதை வழக்கமாக கொண்டுள்ள சகோதரர்கள், இந்த ஆண்டு அதைத் தவிர்க்க வேண்டும். அதற்கு ஆகும் செலவின் மூலம் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவேண்டும்.
சுதந்திர தின விழாவை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், அதையொட்டி சென்னையிலுள்ள கல்லூரி மாணவ மாணவிகளிடையே பேச்சுப் போட்டி நடத்தி, வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று சரத்குமார் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT