Published : 19 Jul 2015 11:06 AM
Last Updated : 19 Jul 2015 11:06 AM

சத்துணவு பணியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் புதுக்கோட்டையில் தேர்வு செய்யப் பட்டனர்.

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அச்சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக்கூட்டத்தில் மாநிலத் தலைவராக கே.காளிங்கநாதன், பொதுச் செயலாளராக எஸ்.குணசேகரன், பொருளாளராக எஸ்.தேனம்மை உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப் பட்டனர்.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனித் துறை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x