Published : 03 Jul 2015 08:38 AM
Last Updated : 03 Jul 2015 08:38 AM

கடலில் மிதந்து வந்த காரால் கோவளம் கடற்கரையில் பரபரப்பு

கோவளம் கடற்கரையில் ரூ.80 லட்சம் மதிப்புடைய பதிவு எண் இல்லாத புதிய வெள்ளை நிற கார் ஒன்று, கடலில் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், கோவளம் கடற்கரையில் பதிவு எண் இல்லாத புதிய வெள்ளை நிற கார் ஒன்று நேற்று கடலில் மிதந்தது. இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித் தனர். போலீஸார், காரை மீட்டு கேளம்பாக்கம் காவல் நிலையத் துக்கு கொண்டு வந்தனர்.

இதுகுறித்து, போலீஸ் வட்ட ராங்கள் கூறியதாவது: பதிவு எண் இல்லாத இந்த காரின் இன்ஜின் எண்ணைக் கொண்டு, விற்பனை செய்யப்பட்ட கடையின் மூலம் அதன் உரிமை யாளரை கண்டறியும் பணி நடந்து வருகிறது. இந்த காரின் மதிப்பு சுமார் ரூ. 80 லட்சம் இருக்கலாம். உரிமையாளர் என நேற்று இரவு 7 மணிவரை யாரும் வரவில்லை. இதனால், செங்கல் பட்டு வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் காரை ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மது அருந்திவிட்டு காரை ஓட்டி வந்து, வழிதெரியாமல் கடற்கரை பகுதிக்கு சென்றிருக்கலாம். கடல் மண் புகுந்ததால், காரை இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கோவளம் கடற்கரையில் ரூ.80 லட்சம் மதிப்புடைய பதிவு எண் இல்லாத ஒரு புதிய வெள்ளை நிற கார் கடலில் மிதந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x