Published : 14 Jul 2015 11:49 AM
Last Updated : 14 Jul 2015 11:49 AM

திரை இசைக்கு உயிரூட்டியவர் எம்.எஸ்.வி.: தமிழிசை

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எம்.எஸ்.வி. மறைவு குறித்து ஃபேஸ்புக்கில் தமிழிசை பதிந்துள்ள இரங்கல் குறிப்பில், "இசை மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரை இசைக்கு உயிர் ஊட்டி கொண்டிருந்தவர் உயிர் துறந்து படுத்து இருப்பதை பார்த்து பதைபதைக்கிறது நெஞ்சம். பாடிக்கொண்டிருந்த வாய் மூடிக்கிடப்பதும் தாளமிட்டு கொண்டிருந்த கைகள் துவண்டு கிடப்பதையும் பார்ப்பதற்கு நெஞ்சு உறுதி வேண்டும்.

அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் உறுதியை, தமிழக மக்களுக்கும் திரை உலகத்தினருக்கும் அவர் குடும்பதாருக்கும் இறைவன் அருள வேண்டும். இசைத்துறையில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய அந்த மாமேதைக்கு அந்த துறையில் பல இளைய தலைமுறையினர்களை ஊக்கபடுத்துவதும் உருவாக்குவதுமே இச்சமுதாயம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x