Published : 09 Jul 2015 08:50 AM
Last Updated : 09 Jul 2015 08:50 AM

கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட்களை ஜூலை 15-ல் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

மாவோயிஸ்ட்கள் என கைது செய்யப்பட்ட 5 பேரையும் வரும் 15-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டுமென, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கோவை, கருமத்தம்பட்டியில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என ரூபேஷ், இவரது மனைவி சைனா, வீரமணி, கண்ணன், அனூப் ஆகிய 5 பேர், கடந்த மே 4-ம் தேதி கைது செய்யப்பட்டனர். கோவை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேருக்கும் ஜூலை 2-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தடை செய்யப்பட்ட இயக்கத்தில் சேர்த்துவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கண்ணனை, ஆழியாறு போலீஸார் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். ரூபேஷை கேரள போலீஸார் காவலில் எடுத்து, வேறொரு வழக்கு தொடர்பாக விசாரித்து வந்தனர். இதனால் ஜூலை 2-ம் தேதி கண்ணன், ரூபேஷ் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. ஜூலை 8-ம் தேதி அவர்கள் அனைவரை யும் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி நேற்று சைனா, வீரமணி, கண்ணன், அனூப் ஆகிய 4 பேர் கோவை முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் ஆஜர்படுத்தப் பட்டனர். ஆனால், கேரள போலீஸா ரால் அழைத்துச் செல்லப்பட்ட ரூபேஷ் நேற்றும் ஆஜர்படுத்தப் படவில்லை.

கியூபிரிவு போலீஸார் தரப்பில் வழக்கறிஞர் ஆறுமுகம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழக்கறிஞர் பாலமுருகன் ஆகி யோர் ஆஜராகினர். அப்போது ஆவணங்களில் உள்ள கையெழுத் துகளுடன், கைது செய்யப்பட்ட வர்களின் கையெழுத்துகள் ஒத்துப்போகிறதா என்பதை அறிய, அவர்களது கையெழுத்து தேவைப்படுவதாக போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கையெழுத்திட நால்வரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

குற்றவியல் சட்டம் 311(ஏ) பிரிவை கடந்த 2006-ல் தமிழக அரசு நீக்கிவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 20(3) பிரிவின்படி, குற்றம் சாட்டப்பட்டவரையே, அவருக்கு எதிரான சாட்சியாக சேர்ப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என கைது செய்யப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, 4 பேருக்கும் ஜூலை 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினமே ரூபேஷை கேரள போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும், சைனாவை கோவை மத்திய சிறைக்கு மாற்றவும் அவர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x