Published : 06 Jul 2015 02:49 PM
Last Updated : 06 Jul 2015 02:49 PM

குழந்தைக்கு மது கொடுத்த சம்பவம்: திருவண்ணாமலையில் ஒருவர் கைது

திருவண்ணாமலை பகுதியில் குழந்தைக்கு மது கொடுத்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் குழந்தையின் தாய்மாமன் எனத் தெரியவந்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் வாட்ஸ்அப்-பிலும் கடந்த 2 நாட்களாக பகிரப்பட்டு வீடியோ காட்சியில் பிஞ்சுக் குழந்தைக்கு மதுவை ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து, அதனைப் பார்த்து இளைஞர்கள் கும்பல் ஒன்று மகிழ்ச்சி கூச்சலிடுவது பதிவாகியிருந்தது.

அந்த வீடியோவில், இளைஞர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவெண் (TN 25 AJ 8209) தெளிவாக தெரிந்தது.

இந்நிலையில், வாட்ஸ் அப் வீடியோ குறித்த செய்தி ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 5 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x