Published : 19 Jul 2015 10:40 AM
Last Updated : 19 Jul 2015 10:40 AM
சென்னையில் புதிதாக பூங்காக்கள் அமைக்கவும், ஏற்கெனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்தவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதில் ஐந்து இடங்களில் பூங்கா அமைக்கவும் மேம்படுத்தவும் டெண்டர் விடப்பட்டுள்ளது.
சென்னையில் பல ஹோட்டல்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் வளாகங்களில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சி பூங்காக்களை அமைத்துள்ளது. சென்னையில் உள்ள ஓ.எஸ்.ஆர் நிலங்களை கண்டறிந்து தற்போது புதிதாக பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்தும் பணிகளும் நடைபெறவுள்ளன.
புதிய பூங்காக்கள், பழைய பூங்காக்களை மேம்படுத்துதல் என மொத்தம் 150 இடங்களில் பூங்காவுக்கான பணிகளை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.
இதில் முதல் கட்டமாக ஐந்து இடங்களுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளன. கொரட்டூர் தாமரைக்குளத்தில் 1.99 கோடியில் புதிதாக பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்பத்தூர் மண்டலத்தில் இ.பி.சாலையில் உள்ள பூங்காவிலும், மங்கள ஏரிப் பூங்காவிலும் நீர் வீழ்ச்சி, பூப்பந்து மைதானம், குழந்தைகள் விளையாட்டு பகுதி உள்ளிட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. தி.நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள நடேசன் பூங்காவை 1.15 கோடி செலவிலும், திரு.வி.க.நகர் மண்டலத்தில் கன்னிகாபுரம் விளையாட்டுத் திடலை ரூ. 2.5 கோடி செலவில் மேம்படுத்தவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT