Published : 14 Jun 2015 10:33 AM
Last Updated : 14 Jun 2015 10:33 AM

இரு வேறு இடங்களில் ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுடன் காரில் சென்ற 19 பேர் கைது: போலீஸ் வாகனச் சோதனையில் சிக்கினர்

காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீஸாரின் வாகனச் சோதனையில், காரில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுடன் சென்ற 19 பேரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் வட சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த தென்னரசு, கடந்த பிப். 5-ம் தேதி தாமரப்பாக்கம் அருகே மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்டார். இந்தக் கொலை தொடர் பாக அம்பேத் என்ற அம்பேத்கர் உட்பட 5 பேர் பெரியபாளையம் போலீஸில் சரணடைந்தனர். பின்னர், 5 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அம்பேத்கர் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் சிலர் அவரை அழைத்து வருவதற்காக சிறை முன் காத்திருந்தனர். அவர்கள், பாதுகாப்புக்காக கார்களில் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாகக் கூறப்படு கிறது.

வாகன சோதனை

இந்த நிலையில், காஞ்சி புரத்தை அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் உள்ள சென்னை- பெங் களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு தாலுகா போலீஸார் வாகனச் சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னை நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 2 அரிவாள், ஒரு நாட்டு வெடிகுண்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, கார் மற்றும் ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டு ஆகிய வற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அந்த காரில் இருந்த யுவராஜ் (19), முருகன் (19), லோகேஷ் (22), நித்தியானந்தம் (20), யஷ்வந்த்ராஜ் (17), பிரவின்குமார் (17), ஜெய்குமார் (19), கார் ஓட்டுநர் சந்திரஹாசன் (24) ஆகிய 8 பேரையும் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூரில்..

இதேபோல, ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் டோல்கேட் பகுதியில் வாகனச் சோதனை நடத்தி ஒரு காரிலிருந்த 4 அரிவாள்களை பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த 11 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர் கள் அம்பேத்கரின் பாதுகாப்புக் காக வேலூர் சென்றுவிட்டு திரும்பியதாகக் கூறினராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x