Published : 13 Jun 2015 10:19 AM
Last Updated : 13 Jun 2015 10:19 AM

மின் சிக்கனத்துக்கு சலுகை தர வேண்டும்: அரசுக்கு ராம.கோபாலன் கோரிக்கை

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மின் கட்டணத்தில் சலுகைகள் வழங்க வேண்டுமென்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை. தமிழகத்தில் பெரும்பாலான இடங்கள் வெப்ப பூமியாக உள்ளது. எனவே, சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்வதன் மூலம் பெருமளவில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யலாம். அதன் மூலம் முப்பது விழுக்காடு மின் தேவையை பூர்த்தி செய்ய வாய்ப்புள்ளது. அத்துடன், மின் சிக்கனத்தை ஊக்குவிக்க, சராசரி உபயோகத்தைவிட சிக்கனமான முறையில் மின்சாரத்தை உபயோகப்படுத்தும் நுகர்வோருக்கு மின் கட்டணத்தில் சலுகைகளை அறிவிக்க வேண்டும்.

மழை நீர் சேமிப்புக்கு தமிழக அரசு முன்பு முக்கியத் துவம் கொடுத்தது. ஆனால் அது தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, வரும் மழை காலத்துக் குள் மழை நீர் சேமிப்பை ஒவ்வொரு வீட்டிலும் நடைமுறைப்படுத்தவும், புதிய கட்டடங்களில் முறையான மழை நீர் வடிகால் மூலம் சேமிப்பை உறுதிப்படுத்தவும் சட்டம் கொண்டு வர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x