Published : 18 Jun 2015 01:20 PM
Last Updated : 18 Jun 2015 01:20 PM
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தொடர்பாக திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் இன்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸார் கூறும்போது, "திருச்சியில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்த 10 வயது மாணவிக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பள்ளியின் சிசிடிவி கேமரா பதிவுகள் சோதனை செய்யப்பட்டன.
அப்போது, மாணவி கழிவறைக்குள் நுழையும்போது அவரை பின் தொடர்ந்து ஆசிரியரும் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றனர்.
இதற்கிடையில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT