Published : 18 Jun 2015 08:24 AM
Last Updated : 18 Jun 2015 08:24 AM
மத்திய வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவின் வடக்கு எல்லைக்கும் ஒடிசாவின் தெற்கு எல்லைக்கும் இடையே நிலை கொண்டுள்ளது.
இதனால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களில் மழை பெய்யும். தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஆங்காங்கே மழை பெய்யும் என்றும் குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.ஆனால் பெரிய பாதிப்பேதும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT