Published : 01 Jun 2015 07:57 AM
Last Updated : 01 Jun 2015 07:57 AM
திருச்சி மாவட்டம், மணப்பாறை யைச் சேர்ந்த திருநங்கை பிரியங்கா பி.எஸ்சி. (நர்சிங்) முடித்துள்ளார். தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய இவர், நேற்று திருச்சி உருமு தனலட்சுமி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற, ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்றார்.
அவர் கூறும்போது, “முதல் முறையாக அரசுத் தேர்வில் பங்கேற்பதால், இரு மாதங்களுக்கு முன் செவிலியர் பணியிலிருந்து விலகி, தேர்வுக்குத் தயாரானேன். எனக்கு ஒரு தம்பி, தங்கை உள்ள னர். குடும்பத்தினருடன் மணப் பாறையில் வசித்து வருகிறேன். தொடர்ந்து, இதுபோன்ற அரசுத் தேர்வுகளில் பங்கேற்பேன். அரசுப் பணியில் சேருவதே எனது லட்சியம். மற்ற திருநங்கையரும் இதேபோல அரசுத் தேர்வுகளில் பங்கேற்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT