Published : 28 Jun 2015 08:55 AM
Last Updated : 28 Jun 2015 08:55 AM
தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மேற்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மாதத் தில் இதுவரை நீலகிரியில் 296.2மி.மீ, கோவையில் 100.6 மி.மீ, தேனியில் 114.4 மி.மீ மழை பெய்துள்ளது. இங்கு மேலும் மூன்று நாட்கள் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக 39.2 டிகிரி வெயில் நேற்று சென்னையில் பதிவாகியிருந்தது. மதுரை, கடலூரில் 38 டிகிரி, திருச்சி 37.5 டிகிரி, வேலூர் 36.2 டிகிரி பதிவாகியிருந்தது. மாநிலத்தின் குறைந்த பட்ச வெப்ப நிலை கடந்த சில நாட்களாக கொடைக் கானலில் பதிவாகியுள்ளது. அங்கு நேற்று அதிகபட்சமாக 17 டிகிரியும் குறைந்தபட்சமாக 12 டிகிரியும் வெயில் பதிவாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT