Published : 14 Jun 2015 11:09 AM
Last Updated : 14 Jun 2015 11:09 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விழிப்புணர்வு பூங்காக்களில் தேர்தல் ஆணையம் பிரச்சாரம்

ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பூங்காக்களில் நேற்று தேர்தல் ஆணையத்தின் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்குப் பதிவை அதிகப்படுத்த விளம்பரத் தட்டிகள் அமைத்தல், துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாணவ, மாணவிகள் பங்கேற்கும் மனிதச் சங்கிலி, உறுதிமொழி ஏற்றல், கடந்த தேர்தலில் வாக்குப் பதிவு குறைந்த இடங்களில் தேர்தல் விழா அழைப்பிதழ் வழங்குதல் என்று தேர்தல் ஆணையம் தினந்தோறும் பல்வேறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற் கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பழைய வண்ணாரப்பேட்டை, சர் தியாகராயர் பூங்கா, புது வண் ணாரப்பேட்டை, தந்தை பெரியார் பூங்கா ஆகிய இடங்களில் நேற்று மிகப்பெரிய வெள்ளை நிற விளம் பரத் தட்டி அமைக்கப்பட்டிருந்தது. அதில் நடைப்பயிற்சிக்கு வந்தவர் கள் கட்டாயம் வாக்களிப்போம் என எழுதி கையெழுத்திட்டனர்.

அப்போது சென்னை மாவட்ட ஆட்சியரும், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலருமான சுந்தர வல்லி, மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) ஷில்பா பிரபாகர் உள்ளிட்டோர் நடை பயிற்சிக்கு வந்திருந்த பொது மக்களிடம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தண்டையார் பேட்டை மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் தலைமையில் நேற்று சோதனை செய்யப்பட்டன.

பெங்களூரூவிலிருந்து வந் திருந்த பெல் நிறுவன அதிகாரிகள் மாநகராட்சி ஆணையரின் முன்னிலையில் இயந்திரங்களை சோதித்து காண்பித்தனர்.

இந்த சோதனை அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. சோதனையின் போது இணை ஆணையர் (கல்வி) ஷில்பா பிரபாகர் சதீஷ், வடக்கு வட்டார துணை ஆணையர் எம்.லட்சுமி, துணை ஆணையர் (தேர்தல்) எஸ்.செந்தாமரை, வண்ணாரப்பேட்டை காவல்துறை இணை ஆணையர் நஜ்மல் ஹோதா ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x