Published : 25 Jun 2015 09:38 AM
Last Updated : 25 Jun 2015 09:38 AM

சென்னை - நெல்லை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல் வேலிக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. முன்பதிவு இன்று (25-ம் தேதி) தொடங்குகிறது.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல் வேலிக்கு ஜூலை 3-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06063) மறுநாள் காலை 9.45-க்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் (06064) மறுமார்க்கமாக ஜூலை 5-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை (ஞாயிறுகளில் மட்டும்) திருநெல் வேலியில் இருந்து மதியம் 2.25-க்கு புறப் பட்டு மறுநாள் அதிகாலை 4.20-க்கு எழும் பூரை வந்தடையும். தாம்பரம், செங்கல் பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும். திருநெல்வேலி யில் இருந்து எழும்பூருக்கு வரும்போது மட்டும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல் வேலிக்கு ஜூலை 3-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. சென்னை எழும்பூரில் இருந்து இரவு 9.05-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் (06063) மறுநாள் காலை 9.45-க்கு திருநெல்வேலியை சென்றடையும். இந்த சிறப்பு ரயில் (06064) மறுமார்க்கமாக ஜூலை 5-ம் தேதியில் இருந்து 26-ம் தேதி வரை (ஞாயிறுகளில் மட்டும்) திருநெல் வேலியில் இருந்து மதியம் 2.25-க்கு புறப் பட்டு மறுநாள் அதிகாலை 4.20-க்கு எழும் பூரை வந்தடையும். தாம்பரம், செங்கல் பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சி மணியாச்சி ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும். திருநெல்வேலி யில் இருந்து எழும்பூருக்கு வரும்போது மட்டும் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளத் துக்கு ஜூலை 3, 10-ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06065) மறுநாள் காலை 10.50-க்கு எர்ணாகுளத்தை சென்றடையும். மறுமார்க்கமாக இந்த சிறப்பு ரயில் (06066) வரும் ஜூலை 5 மற்றும் 12-ம் தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.15-க்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x