Published : 04 Jun 2015 07:22 AM
Last Updated : 04 Jun 2015 07:22 AM

வி.சி. பிரமுகர் கொலை வழக்கு: நீதிமன்றத்தில் இளைஞர் சரண்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் தனிச் செயலர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருவள்ளூர் நீதிமன் றத்தில் இளைஞர் ஒருவர் நேற்று மாலை சரணடைந்தார்.

சென்னை மடிப்பாக்கம் அருகே மூவரசம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் தனிச் செயலாளராக இருந்தார். கடந்த மாதம் 20-ம் தேதி காலை, மடிப்பாக்கம் கூட்டுரோட்டில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கூலிப்படை தலைவன் பெருமாள் உள்ளிட்ட 5 பேரை மடிப்பாக்கம் போலீஸார் ஏற்கெனவே கைது செய்துள்ளனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த ஜெகநாதனை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை திருவான்மியூர்- பெரியார் தெருவைச் சேர்ந்த பழனி (23) என்பவர், நேற்று மாலை திரு வள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னி லையில் சரணடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x