Published : 25 Jun 2015 09:41 AM
Last Updated : 25 Jun 2015 09:41 AM
திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தேசிய அனல் மின் கழகம் சார்பில் 3 அலகுகள் கொண்ட அனல் மின் நிலையம் இயங்குகிறது. இதில், 1500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக கடந்த 22-ம் தேதி முதல், 2- வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை 3- வது அலகில், நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் 3- வது அலகிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், தற்போது, வல்லூர் அனல் மின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அனல்மின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT