Published : 01 Jun 2015 07:41 AM
Last Updated : 01 Jun 2015 07:41 AM
சென்னை ஐஐடியில் இயங்கி வந்த மாணவர் அமைப்பான அம்பேத்கர்- பெரியார் வாசிப்பு வட்டத்தை ஐஐடி நிர்வாகம் தடை செய்தது. ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையைக் கண் டித்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் பகுதியில் நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராபர்ட் எபிநேசர், மீஞ்சூர் பகுதித் தலைவர் நாகராஜ், செயலாளர் மோசஸ், சிஐடியு பகுதிச் செயலாளர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், சென்னை ஐஐடி நிர்வாகத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT