Published : 30 Jun 2015 07:32 AM
Last Updated : 30 Jun 2015 07:32 AM
அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, சென்னை வர்த்தக மையத்தில் நாளை நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
ரமலானை முன்னிட்டு அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் நாளை மாலை 6 மணிக்கு இந்நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கிறார்.
மேலும், அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT