Published : 26 Jun 2015 11:18 AM
Last Updated : 26 Jun 2015 11:18 AM

விவசாயிகள் பிரச்சினை: ஜூன் 29-ல் விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததைக் கண்டித்து, இமமாதம் 29-ம் தேதி திருவாரூரில் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஜூன் 12-ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததை முன்னிட்டும், விவசாயிகளுக்கு தொடர்ந்து இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்தும் திருவாரூரில் (தெற்கு வீதி நகராட்சி எதிர்புறம்) 29.06.2015 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழகத்தை சேர்ந்தவர்களும், டெல்டா பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு தலைமைக் கழகம் கேட்டுக்கொள்ப்படுகிறது.

இவ்வாறு அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x