Published : 30 Jun 2015 07:38 AM
Last Updated : 30 Jun 2015 07:38 AM

ஜூலை 13-ல் அஞ்சல் குறைதீர்வு கூட்டம்

தமிழக அஞ்சல் வட்டத்துக்கான குறைதீர்வு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக அஞ்சல் வட்ட அலுவலகத்தில் வரும் ஜூலை 13-ம் தேதி அன்று நடக்கவுள்ளது.

இது தொடர்பாக இந்திய அஞ்சல் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழக அஞ்சல் வட்டத்துக்கான குறைதீர்ப்பு கூட்டம் வரும் ஜுலை 13-ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கவுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்ட அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் பொதுமக்களும் வாடிக்கையாளர்களும் திரளாக பங்கேற்று குறைகளை கூறலாம். மணியார்டர், பதிவு மற்றும் துரித அஞ்சல், சேமிப்பு கணக்கு, அஞ்சல் ஆயுள் காப்பீடு உள்ளிட்டவை குறித்து புகார் அளிக்க விரும்புவோர் அவைபற்றிய முழு விவரத்தை அளிப்பது அவசியம்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x