Published : 02 Jun 2015 07:56 AM
Last Updated : 02 Jun 2015 07:56 AM

ஆர்.கே.நகரில் போட்டியிட கம்யூனிஸ்ட்டுகள் முடிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் வேட்பாளரை களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நாளை நடக்கவுள்ளது. அக்கூட்டம் முடிந்ததும் இருகட்சிகளும் கூட்டாக விவாதித்து ஆர்.கே. நகரில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x