Published : 09 Jun 2015 10:28 AM
Last Updated : 09 Jun 2015 10:28 AM

கலப்பட டீத்தூளை தடுக்க வேண்டும்

மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வி.சவரிமுத்து ‘உங்கள் குரலில்’ கூறும்போது, “சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் கலப்படம் செய்யப்பட்ட டீ தூள் தான் பயன்படுத்தப்படுகிறது. பெரிய ஓட்டல்களில் டீ குடிப்பதற்கும், டீக்கடைகளில் டீ குடிப்பதற்கும் அதிக வித்தியாசம் தெரிகிறது.

மேகி நூடுல்ஸை விட டீ குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். எனவே, முதலில் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து உணவு பாது காப்புத் துறை அதிகாரிகள் கூறும் போது, “டீ தூளைப் பொருத்தவரை தரமற்றது, ஆபத்தானது என்று 2 வகை உண்டு. டீத்தூளில் கலப்படம் இருப்பது தெரிய வந் தால், சட்ட நடவடிக்கைகள் எடுக் கப்படும். அதிக அளவில் டீத் தூள் தயாரிக்கப்படும் ஊட்டி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடத்தப்படும் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x