Published : 18 Jun 2015 08:13 AM
Last Updated : 18 Jun 2015 08:13 AM
கிரானைட் குவாரி முறை கேடு குறித்து சட்ட ஆணையர் சகாயம் விசாரித்து வருகிறார். இவ்வழக்கு கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத் தில் விசாரணைக்கு வந்தபோது இறுதி அறிக்கை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
குவாரி அதிபர்கள் தாக்கல் செய்த வருமான வரி விவரங்களை அளிக்கும்படி வருமான வரித் துறைக்கும், எரிபொருள் வாங்கி யது குறித்த தகவல்களை அளிக் கும்படி எண்ணெய் நிறுவனங் களுக்கும் சகாயம் கடிதம் அனுப்பி யிருந்தார். இந்த நிறுவனங்கள் அறிக்கை தாக்கல் செய்யாததால் இறுதி அறிக்கையை நிறைவு செய்ய முடியவில்லை. இதனால் நீதிமன்றம் மேலும் 6 வார கால அவகாசம் அளித்துள்ளது.
இந்நிலையில் 15-ம் கட்ட விசாரணையை மதுரையில் நேற்று சகாயம் தொடங்கினார். இறுதி அறிக்கையில் சேர்க்க வேண்டிய ஆவணங்கள் குறித்து ஆய்வுக் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அறிக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்கள் உடனே அளிக்கும்படி சகாயம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT