Published : 01 Jun 2015 08:50 PM
Last Updated : 01 Jun 2015 08:50 PM

‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக அரசு சார்பில் வீரதீர செயலுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு தகுதியுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் - செயலர் ஷம்பு கல்லோலிகர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: ''தமிழக அரசு சார்பில் வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ளgf கூடிய ஆற்றல்மிக்க ஒரு பெண்மணிக்கு அவரது துறை சார்ந்த பணி அல்லது நடவடிக்கைக்காக ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்பட்டு வருகிறது. 2015-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எண் 116-ஏ, ஈவேரா, பெரியார் நெடுஞ்சாலை, நேரு பூங்கா, சென்னை 600 084’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜூன் 30. விண்ணப்ப உறை மீது ‘2015-ம் ஆண்டு கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பம்’ எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x