Published : 06 Jun 2015 07:57 AM
Last Updated : 06 Jun 2015 07:57 AM
கோயம்பேட்டில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக் டரிடம் 21 சவரன் நகை திருடப்பட்டது.
சென்னை திருவொற்றி யூர் காலடிப்பேட்டை பாலகிருஷ்ண நாயுடு காலனி முதல் தெருவை சேர்ந்தவர் உமாபதி (62). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி லலிதா (58). நேற்று முன்தினம் ஆரணி செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு இருவரும் வந்தனர். பேருந்தில் ஏறி லக் கேஜ்களை வைத்துவிட்டு இருக்கை யில் அமர்ந் தனர்.
பேருந்தில் கைவரிசை
பேருந்து புறப்பட்டு பூந்தமல்லியை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது தற்செயலாக உமாபாரதி பார்த்த போது, லக்கேஜ்களுடன் இருந்த 21 சவரன் நகைகளை வைத்திருந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உமாபதி கீழே இறங்கி வந்து, கோயம்பேடு போலீஸில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT