Published : 06 Jun 2015 07:48 AM
Last Updated : 06 Jun 2015 07:48 AM

சாலையில் சிதறிக்கிடந்த பொறியியல் விடைத்தாள்கள்

அண்ணா பல்கலைக்கழக பொறியி யல் மாணவர்களின் விடைத்தாள் கள் அடங்கிய கட்டுகள் சென்னை கிண்டி ஐஐடி மேம்பால சாலையில் நேற்று சிதறிக்கிடந்தன. இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ்.கணேசனிடம் கேட்டபோது, “பழைய விடைத்தாள்களை மறுசுழற்சி செய்வதற்காக தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்கு உடனுக்குடன் வழங்கிவிடுவோம். அவ்வாறு வழங்கப்பட்ட விடைத்தாள் கட்டுகளை வாகனத்தில் எடுத்துச்சென்றபோது அவை கீழே விழுந்திருக்கின்றன. அந்த விடைத்தாள்கள் எல்லாம் பழைய விடைத்தாள்கள்தான். அவை காகித நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x