Published : 15 Jun 2015 07:37 AM
Last Updated : 15 Jun 2015 07:37 AM
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் மேயர் சைதை துரை சாமி, மாணவர்களிடம் நூதன முறையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, பிரச் சாரம் சூடுபிடித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வாக்காளர்கள் அனைவரும் வீட் டில் இருப்பதை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் அனை வரும் அவர்களின் சொந்த மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சம்மந்தப்பட்ட பகுதி நிர்வாகிகள், மற்றும் மகளிர் ஆகியோருடன் வீடு வீடாகச் சென்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
முன்னாள் முதல்வரும், அமைச் சருமான ஓ.பன்னீர்செல்வம், தண்டையார்பேட்டை பகுதியில், அப்பகுதி தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத் உடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார்.
மேயர் பிரச்சாரம்
மாணவர் மற்றும் இளைஞர் வாக்கு வங்கியை ஈர்க்கும் வித மாக சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, நூதன முறையில் “என்ன படிக்கலாம்” என்ற தலைப்பில் கொருக்கு பேட்டையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் 14 வகையான திட் டங்களையும், சென்னை மாநக ராட்சி பள்ளி மாணவர்களுக்கு 48 வகையான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார். இது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டங்களாகும்.இத்திட்டங்களால் லட்சக் கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட் பாளர் சி.மகேந்திரன் தண்டையார் பேட்டை நேதாஜி நகரில் உள்ள நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார். அவர் நேதாஜி நகர், கருணாநிதி நகர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.
சுயேச்சை வேட்பாளர் டிராஃபிக் ராமசாமி வ.உ.சி.நகரில் தனது தேர்தல் அலுவலகத்தை நேற்று திறந்தார். பின்னர் அப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT