Published : 17 Jun 2015 07:37 AM
Last Updated : 17 Jun 2015 07:37 AM

காங்கிரஸிலிருந்து கோவை செல்வராஜ் நீக்கம்

காங்கிரஸ் சேவாதள அமைப்பின் மாநில அமைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கோவை செல்வராஜ் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘காங்கிரஸ் மாநில செயற்குழு தீர்மானத்துக்கு எதிராக செயல்பட்டதால் மேலிடத்தின் ஒப்புதலுடன் கோவை செல்வராஜ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக’’ தெரிவித்துள்ளார்.

இது குறித்து தி இந்துவிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என கோவை செல்வராஜ் பகிரங்கமாக பேசியுள்ளார். எனவே, மேலிடத்தின் அனுமதியுடன் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்’’ என்று தெரி வித்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை செல்வராஜ் குற்றம்சாட்டி வந்த நிலையில் அவர் நீக்கப்பட்டுள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x