Published : 01 Jun 2015 07:39 AM
Last Updated : 01 Jun 2015 07:39 AM
இணையதளத்தில் பதிவிறக்கம் செய்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இன்றுக்குள் (ஜூன் 1) சென்டாக் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான சென்டாக் விண்ணப்பங்கள் கடந்த 9-ம் தேதி முதல் ஆன் லைனில் வழங்கப்பட்டது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இணைய தளம் வாயிலாக பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவு செய்தனர்.
மேலும் தரவிறக்கம் செய்த இணைய விண்ணப்பத்தை நேரடியாகவும், அஞ்சல் மூலமும் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.
பூர்த்தி செய்த விண்ணப்பங் களை சமர்ப்பிக்க இன்று (ஜூன் 1ம் தேதி) கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைச்சாவடி அரசு பொறியி யல் கல்லூரி வளாகத்தில் உள்ள சென்டாக் அலுவலகத் தில் மாலை 4.30 மணிக்குள் நேரிலோ அல்லது தபாலிலோ பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்களை சமர்ப்பிக்க வேண் டும்.
அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் நிராகரிக் கப்படும் என்று சென்டாக் தரப்பு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT