Published : 17 Jun 2015 07:35 AM
Last Updated : 17 Jun 2015 07:35 AM
கல் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க்குக்கு 2006-ல் உரிமம் வழங்கப்பட்டது. அப்போது மத்திய அரசிடம் இருந்து பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், அதற்கான ஆவணம் மத்திய அரசுக்கு 2014-ம் ஆண்டு வரை போய்ச் சேரவில்லை. இதையடுத்து அந்த ஆண்டு கல் கேபிள் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கல் கேபிள் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் மனுதாரருக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து புதிய முடிவெடுக்கும்படி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் மற்றும் மத்திய உள்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை நீதிபதிகள் சதீஷ் அக்னிகோத்ரி, வேணுகோபால் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று விசாரித்து, மனுவுக்குப் பதில் அளிக்கும்படி கல் கேபிள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT