Published : 11 Jun 2015 07:59 AM
Last Updated : 11 Jun 2015 07:59 AM

நடந்து சென்ற பெண்ணை வெட்டி தாலி பறிப்பு: ஆபத்தான நிலையில் சிகிச்சை

ஊரப்பாக்கம் அடுத்த கோதண்ட ராமர் நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு சாலை யில் நடந்து சென்ற பெண்ணின் தலையில் அரிவாளால் வெட்டிய மர்மநபர்கள், அவர் கழுத்தி லிருந்த 5 சவரன் தாலி செயினை திருடி சென்றனர். பலத்த காய மடைந்த பெண் உயிருக்கு ஆபத் தான நிலையில், தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த கோதண்ட ராமர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கராஜன். தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரு டைய மனைவி மைதிலி (30). இவர், டியுஷனுக்கு சென்ற தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு சாலையில் நடந்தவாறு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாக னத்தில் வந்த மர்மநபர்கள், அவரின் கழுத்திலிருந்த தாலி செயினை பறிக்க முயன்றனர். மைதிலி இதை தடுக்க முயன்ற தால், அவரின் தலையில் அரிவா ளால் மர்மநபர்கள் 3 இடங்களில் வெட்டினர். இதில் பலத்த காய மடைந்த அவர் மயக்கமடைந்து சாலையில் சரிந்தார். இதை பயன் படுத்தி மர்மநபர்கள் 5 பவுன் மதிப்புள்ள தாலி செயினை திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர்.

கூடுவாஞ்சேரி போலீஸார், அவரை மீட்டு தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள மைதிலி, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். ரங்கராஜன் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால், ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் மத்தி யில் சாலையில் நடமாடவே அச்சம் ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x