Published : 24 Jun 2015 03:35 PM
Last Updated : 24 Jun 2015 03:35 PM

சேமிப்பு கணக்கில் ரூ.500 இருந்தால் ஏ.டி.எம் கார்டு பெறலாம்: அஞ்சல் துறை

அஞ்சல் சேமிப்பு கணக்கில் ரூ.500 இருந்தால் போதும் ஏ.டி.எம் அல்லது டெபிட் கார்டு வழங்கப்படும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு ஏ.டி.எம் வசதியை பெற சேமிப்பு கணக்கில் குறைந்த பட்சம் ரூ.5000 இருக்க வேண்டும். இந்த வசதியை பயன்படுத்த எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படாது.

தற்போது தி.நகர், அண்ணாசாலை, மைலாப்பூர், பரங்கிமலை, தாம்பரம் ஆகிய தலைமை அஞ்சல் அலுவலகங்களில் ஏ.டிஎம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் விவரங்களுக்கு அஞ்சல் அலுவலர்களை தொடர்பு கொள்ளுமாறு சென்னை மண்டல தலைமை அலுவலர் வெளியிட்டுள்ள அதிகாரி செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x