Published : 18 Jun 2015 07:55 AM
Last Updated : 18 Jun 2015 07:55 AM
ரம்ஜான் நோன்பு தொடங்கு வதை ஒட்டி, நோன்பு கஞ்சி தயாரிக்க தமிழகத்தில் உள்ள 3000 பள்ளிவாசல் களுக்கு 4500 டன் அரிசி உணவுப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் வழங் கப்படுகிறது.
ரம்ஜான் நோன்பு இம் மாதம் தொடங்க உள் ளது. இதையொட்டி, பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிக்கப்படும். கடந்த 2001-ம் ஆண்டு முதல் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறையின் சார்பில் தேவைப்படும் பச்சரிசி வழங்கப்படுகிறது.
இது குறித்து பள்ளி வாசல்கள் தரப்பில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில், இந்தாண்டு தமிழகம் முழுவதும் உள்ள 3000 பள்ளிவாசல்களுக்கு 4500 டன் பச்சரிசி வழங்க உணவுப்பொருள் வழங் கல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT