Published : 15 Jun 2015 05:08 PM
Last Updated : 15 Jun 2015 05:08 PM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்து 17 மாணவ, மாணவிகள் முதல் இடம் - ஜூன் 19 முதல் 25 வரை முதல்கட்ட கவுன்சலிங்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்து 17 மாணவ, மாணவிகள் முதல் இடம் பிடித்தனர். முதல்கட்ட கவுன்சலிங் வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 398 இடங்கள் (15%) போக, மீதமுள்ள 2,257 இடங்களும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 இடங்கள் போக மீதமுள்ள 85 இடங்களும் மாநில அரசுக்கு உள்ளன. இவை தவிர 8 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 833 எம்பிபிஎஸ் இடங்களும் 19 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 1,020 பிடிஎஸ் இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கு 32,184 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 444 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 31,525 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கடந்த 11-ம் தேதி மாணவர்களுக்கான ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி தலைமை வகித்தார். தரவரிசைப் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளி யிட, சுகாதாரத்துறை செய லாளர் ராதாகிருஷ்ணன் பெற் றுக்கொண்டார். மாணவர் சேர்க் கைக்குழு செயலாளர் டாக்டர் உஷா சதாசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர், நிருபர்களிடம் அமைச் சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் கீதாலட்சுமி ஆகியோர் கூறியதாவது:

36 பேர் இரண்டாம் இடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட் ஆஃப் எடுத்து 14 மாணவர்கள், 3 மாணவிகள் என மொத்தம் 17 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான மாண வர்கள் நாமக்கல் மாவட்டத்தில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 199.75 கட் ஆஃப் எடுத்து 36 பேர் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளனர்.

முதல்கட்ட கவுன்சலிங் சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் வரும் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது. விளையாட்டுப் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கு19-ம் தேதி கவுன்சலிங் நடக்கும். பொதுப் பிரிவினருக்கான கவுன்சலிங் 20-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

முதல் பட்டதாரி விண்ணப்பங்கள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப் புக்கு மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த 30,249 பேரும், மற்ற கல்வி வாரியத்தில் படித்த 1,276 பேரும், பழைய மாணவர்கள் 4,679 பேரும் விண்ணப்பித்துள்ளனர். குடும்பத்தில் முதல் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் 12,242 ஆகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x