Published : 24 Jun 2015 07:46 AM
Last Updated : 24 Jun 2015 07:46 AM

செயல்வழிக் கற்றலை கண்காணிக்க அரசு உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் முறை ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா? என்பதை கண்காணிக் குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் அனுப்பியுள்ள சுற்ற றிக்கை: தொடக்கக்கல்வித் துறையைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 4-ம் வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் முறை கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். இது தொடர்பான வழிமுறைகளை பின்பற்றுமாறு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துவ துடன் செயல் வழிக்கற்றல் முறை யானது ஒழுங்காக பின்பற்றப் படுகிறதா? என்பதை உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் மூலமாக கண்காணிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x