Published : 01 Jun 2015 07:18 AM
Last Updated : 01 Jun 2015 07:18 AM
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக அகில இந்திய தேசிய லீக் தலைவர் எஸ்.ஜே. இனாயத்துல்லா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘5-வது முறையாக முதல்வராக பதவியேற்றுள்ள ஜெயலலிதா ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார். தமிழகத்தில் சிறுபான்மையின ரின் பாதுகாவலராக ஜெயலலிதா விளங்குகிறார். எனவே, ஆர்.கே.நகரில் அவரது வெற்றிக்காக அகில இந்திய தேசிய லீக் கட்சி பிரச்சாரம் செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT