Published : 23 Jun 2015 07:06 AM
Last Updated : 23 Jun 2015 07:06 AM
சென்னை பழைய வண்ணாரப் பேட்டை காவல் நிலையம் தங்க சாலை மேம்பாலம் அருகே உள்ளது. இந்த நிலையத்தில் ஓர் அறையில் ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆவணங்கள் இருந்த அறையில் தீப்பிடித்தது. இரவு நேரம் என்பதால் காவல் நிலையத்தில் 2 போலீஸார் மட்டுமே இருந்தனர். உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். வண்ணாரப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் அறையில் இருந்த பெரும்பாலான ஆவணங்கள் எரிந்துவிட்டன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் பூத் மீது தாக்குதல்
அம்பத்தூர் காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான போலீஸார் பாடி சி.டி.எச். சாலை-கொரட்டூர் கிழக்கு அவென்யூ சாலை சந்திப்பில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த நபர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியதில், அவர்கள் மது போதையில் இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் கள் கொரட்டூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (30), பாண்டியன் (26) என்பது தெரிந்தது.
உடனே அவர்களுக்கு போலீ ஸார் அபராதம் விதித்தனர். அவர் கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் அபராதத்தை செலுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை பெற்று செல்லுமாறு கூறினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அருகே இருந்த போலீஸ் பூத்தின் கண்ணாடிகளை கல் வீசி உடைத்தனர். உடனே போலீஸார் இருவரையும் பிடித்து கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT