Published : 22 Jun 2015 07:23 AM
Last Updated : 22 Jun 2015 07:23 AM
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, 17 ஆயிரம் என்.சி.சி மாணவர்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய மாணவர் படை (என்.சி.சி.) சார்பில் சென்னையில் நேற்று பிரம்மாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. தேசிய மாணவர் படையின் துணை பொது இயக்குநர் கமாடோர் விஜேஷ் குமார் கார் இதற்கு தலைமை தாங்கினார்.
சென்னையில் மருத்துவக் கல்லூரி மைதானம், லயோலா, பச்சையப்பன் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 8 இடங்களில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் 17 ஆயிரத்து 115 பேர் பங்கேற்றனர்.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் தேசிய மாணவர் படை சார்பில் யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT